சிம்டாங்காரன் - தாளத்தின் ஜாலம்


ஒரு குத்துப்பாட்டை, மேற்கத்தேய சங்கீதத்தின் முக்கியமான நுட்பங்களைக் கொண்டு எப்படி உருவாக்கலாம் என்றால், அது சிம்டாங்காரன்தான்...

பாடலின் மொழி என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. அதுதேவையும் இல்லை. தமிழ் பாடல் என்றாலும் கூட அதன் வரிகளை நான் கேட்பதில்லை, இசையே எமக்கு முதன்மை.....

தனியன் காதல்



மெசெஞ்சரில் காட்டும் அதே அவசரத்தை இங்கும் காட்டிக்கொண்டிருந்தேன். அவள் வகுப்பில் எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒருமுறை என்னிடம் எதையாவது கேட்கவோ, சீண்டவோ, பென்சிலால் என்னை அல்லது என் புத்தகத்தை தட்டவோ அவள் தவரவில்லை.

பெரும்பாலும் எங்களது பேச்சு வகுப்பு ஆசிரியரின் உடை தொடர்பிலும், படிப்பிக்கும் போது அவர் விடும் பிழைகள் தொடர்பிலுமாக இருந்தன.

எனக்கு அப்படி இன்னொருவரை கிண்டல் செய்வது, முக்கியமாக அவர் அறியாமல் அவரை பரிகாசம் செய்வதெல்லாம் பிடிப்பதில்லை.

ஆனால் இவளென்பதால் அவை பிடித்திருந்தன.

கதிர்காமத்தில்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.

எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.

திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'

சூரியன்FM + நான் - பாகம் 7

இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...

ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..

நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, 'தொடருந்து' என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.

உஷ்ணம் - சிறுகதை

என்னையெல்லாம் எந்தப் பெண்தான் பார்ப்பாள்.

அழகானப் பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.

அழகானப் பெண்கள் என்றும் சொல்லமுடியாது.

அநேகமாக என்னைக் கடந்து போகின்ற எல்லா பெண்களையும் நான் பார்ப்பதுண்டு.

ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு

ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.

நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.

சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சூரியன் FMமும் நானும் - பாகம் 6

நேற்றையக் காற்றில் நான்

2004-05ஆக இருக்க வேண்டும், சரியாக நினைவில் இல்லை.

சூரியனின் நேற்றையக் காற்று நிகழ்ச்சி மீதான விருப்பு அதிகரித்தக் காலம் அது.

கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)

பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.

எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.

அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.

சூரியன் FMமும் நானும் - பாகம் 5

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்

நான் ஏன் எழுதுகிறேன்....?

அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...

ஆவிகளுக்கு வாசம் உண்டா?

நேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா? இல்லையா? என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.

சூரியன் FMமும் நானும்... பாகம் 4

2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன... 

முகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர். 


மாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...

சூரியன் FMமும் நானும்... பாகம் 3


இசையைத் துறந்த இரண்டு வருடங்கள்... 

எனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.

ஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை 'கொலை' செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.

அவிசி காலமானார்....!

பெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்.... 

அவிசியின் மரணமும் அப்படித்தான்... 

ஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....

சூரியனும் நானும் - பாகம் 2

2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..

இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.

சூரியன் வானொலியும் நானும்........ (01)

2004-05

அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.

குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.