ஒருமுறை

அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை - பழைய வீடு II

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன.
23 வருடங்களுக்கு முன்னர் இந்த வீடு இப்படி இருக்கவில்லை. இன்னும் நேர்த்தியாக, அழகாக இருந்ததாக நினைவு. சுற்றிலும் வாழைத் தோப்பு இருந்தது. இந்த அளவுக்கு புற்கள் மண்டி இருக்கவில்லை. கீழே எப்போதும் சலசலப்புடன் ஆறு ஒன்று கிளைபிரிந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி போய் கொண்டிருக்கும்.
அந்த பலா மரங்களில் எப்போது காய் இருந்துகொண்டே இருக்கும். மங்குஸ் மரம், குரட்டைச் செடிகள் என எத்தனையோ பழ மரங்கள், ரோசா, கானேசன் என்று பெயர்தெரியாத பல மலர்கள் அந்த வீட்டை சுற்றிலும் இருக்கும். 

அப்போது நான், 2 தம்பிகள், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் அங்கே வசித்தோம். என் கடைசி தம்பி 2 வயதில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்த்தப்பியதும் அங்குதான்.

புதையல் - சிறுகதை - விக்கிவிக்னேஷ்

அந்த வீட்டுக்கு அதீத வயதாகி இருந்தது...
அங்கிருந்த மனிதர்களைப் போலவே...

நெடுந்தெருவில் தூரப் பயணத்தின் பின்னர், ஆரம்பிக்கும் ஒரு தனிவழிப் பாதையின் முடிவில் அந்த வீடு அமைந்திருந்தது.

பாதை ஓரங்களில் புற்கள் படர்ந்திருந்தாலும், வீட்டு வாசல் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சிறிய வாயிற்கதவு, சில இடங்களில் பூச்செடிகள், விளக்கு வைப்பதற்கான ஒரு பெட்டி, ஆங்காங்கே உடைந்த கூரை, திறந்த கதவு.... மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றை மாத்திரம் கொண்டிருந்தது அந்த வீடு.

ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறதா?

2016ம் ஆண்டு எழுதப்பட்டு தினக்குரலில் வெளியான கட்டுரை

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் வௌ;வேறு வகையான நிலைப்பாடுகள் வெளியாக்கப்படுகின்றன.


இலங்கையைச் சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் இரண்டு வருடங்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பட்டம் - சிறுகதை


அறைவாங்கிய கன்னம் சிவந்திருந்தது. அழுதபடியே உறங்கிப் போன சோபனாவின் கண் ஓரத்தில் ஒரு நீர்த்துளி உயிர்ப்புடன் இருந்தது. அருகில் வந்து படுத்த சுந்தர், தலையணைக்கும் சோபனாவின் கழுத்;துக்கும் இடையில் கையை செருகி, அணைத்துக் கொள்ள முற்பட்டான். உறக்கத்தில், அடித்தான் என்பதை நினைத்தும் பார்க்காமல் சோபனா தாமாக சுந்தரின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள். சோபனாவின் கண் ஓரத்தில் உயிர்ப்புடன் இருந்த கண்ணீர்த்துளியும், கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அச்சும் சுந்தருக்கு நீர்த்தாரைப் போல கண்ணீரைப் பெருக வைத்தது.

சனநாயகம்

தூரத்தே யொரு 
துயரம் போலும்.... 

யாதெனப் பார்க்க முன் 

எழுந்தன ஓலங்கள்... 
அந்திப் பொழுதிலோர்
அவலத்து நேரம்...
மந்திரச் சோலைகள்
மயானமாய் மருவின... 
திக்குகள் இழந்த
சிறுவண்டு போல
மக்கள் ஆட்சியோர்
மய்யப் பெட்டிக்குள்... 

சிம்டாங்காரன் - தாளத்தின் ஜாலம்


ஒரு குத்துப்பாட்டை, மேற்கத்தேய சங்கீதத்தின் முக்கியமான நுட்பங்களைக் கொண்டு எப்படி உருவாக்கலாம் என்றால், அது சிம்டாங்காரன்தான்...

பாடலின் மொழி என்னவென்று இன்னும் எனக்கு புரியவில்லை. அதுதேவையும் இல்லை. தமிழ் பாடல் என்றாலும் கூட அதன் வரிகளை நான் கேட்பதில்லை, இசையே எமக்கு முதன்மை.....

தனியன் காதல்



மெசெஞ்சரில் காட்டும் அதே அவசரத்தை இங்கும் காட்டிக்கொண்டிருந்தேன். அவள் வகுப்பில் எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒருமுறை என்னிடம் எதையாவது கேட்கவோ, சீண்டவோ, பென்சிலால் என்னை அல்லது என் புத்தகத்தை தட்டவோ அவள் தவரவில்லை.

பெரும்பாலும் எங்களது பேச்சு வகுப்பு ஆசிரியரின் உடை தொடர்பிலும், படிப்பிக்கும் போது அவர் விடும் பிழைகள் தொடர்பிலுமாக இருந்தன.

எனக்கு அப்படி இன்னொருவரை கிண்டல் செய்வது, முக்கியமாக அவர் அறியாமல் அவரை பரிகாசம் செய்வதெல்லாம் பிடிப்பதில்லை.

ஆனால் இவளென்பதால் அவை பிடித்திருந்தன.

கதிர்காமத்தில்

ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.

எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.

திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'

சூரியன்FM + நான் - பாகம் 7

இந்த சர்ச்சை அமைதியாகி நீண்ட நாட்கள்...

ஆனாலும் முடிந்துவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விழித்துக் கொள்ளலாம்..

நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தப் போது, 'தொடருந்து' என்ற சொல்லை சூரியன் எப்.எம். செய்திகள் பாவிக்க ஆரம்பித்தது.

உஷ்ணம் - சிறுகதை

என்னையெல்லாம் எந்தப் பெண்தான் பார்ப்பாள்.

அழகானப் பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.

அழகானப் பெண்கள் என்றும் சொல்லமுடியாது.

அநேகமாக என்னைக் கடந்து போகின்ற எல்லா பெண்களையும் நான் பார்ப்பதுண்டு.

ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு

ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.

நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.

சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சூரியன் FMமும் நானும் - பாகம் 6

நேற்றையக் காற்றில் நான்

2004-05ஆக இருக்க வேண்டும், சரியாக நினைவில் இல்லை.

சூரியனின் நேற்றையக் காற்று நிகழ்ச்சி மீதான விருப்பு அதிகரித்தக் காலம் அது.

கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)

பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.

எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.

அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.

சூரியன் FMமும் நானும் - பாகம் 5

சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்

நான் ஏன் எழுதுகிறேன்....?

அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...