ஒருமுறை
அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.







