சூரியன் FMமும் நானும்... பாகம் 3


இசையைத் துறந்த இரண்டு வருடங்கள்... 

எனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.

ஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை 'கொலை' செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.

அவிசி காலமானார்....!

பெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்.... 

அவிசியின் மரணமும் அப்படித்தான்... 

ஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....

சூரியனும் நானும் - பாகம் 2

2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..

இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.

சூரியன் வானொலியும் நானும்........ (01)

2004-05

அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.

குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.