ஒருமுறை

அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை - பழைய வீடு II

சுவர்கள் ஒன்றும் 'சும்மா' இல்லை. அவற்றுக்கு கண்கள், காதுகள், உணர்வுகள் இருக்கின்றன.
23 வருடங்களுக்கு முன்னர் இந்த வீடு இப்படி இருக்கவில்லை. இன்னும் நேர்த்தியாக, அழகாக இருந்ததாக நினைவு. சுற்றிலும் வாழைத் தோப்பு இருந்தது. இந்த அளவுக்கு புற்கள் மண்டி இருக்கவில்லை. கீழே எப்போதும் சலசலப்புடன் ஆறு ஒன்று கிளைபிரிந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி போய் கொண்டிருக்கும்.
அந்த பலா மரங்களில் எப்போது காய் இருந்துகொண்டே இருக்கும். மங்குஸ் மரம், குரட்டைச் செடிகள் என எத்தனையோ பழ மரங்கள், ரோசா, கானேசன் என்று பெயர்தெரியாத பல மலர்கள் அந்த வீட்டை சுற்றிலும் இருக்கும். 

அப்போது நான், 2 தம்பிகள், அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் அங்கே வசித்தோம். என் கடைசி தம்பி 2 வயதில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர்த்தப்பியதும் அங்குதான்.