சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒருமுறை

அப்போது அவன் மனக்கலக்கத்துடன் தெருவோரம் நடந்துக் கொண்டிருந்தான். காற்சட்டை பையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. சிக்கினால் சின்னாப்பின்னம்தான் என்ற நிலை. சாமுவேல் அவன் பெயர். 30 வயது. ஜெல் வைத்து வாரிய தலை மயிருள் ஒருசில நரைபெற்றிருந்தன. கண்ணுக்கு கண்ணாடி அணிந்திருந்தான். நீலநிற ஜேசியும், அதேநிறத்தில் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான்.

புதையல் - சிறுகதை - விக்கிவிக்னேஷ்

அந்த வீட்டுக்கு அதீத வயதாகி இருந்தது...
அங்கிருந்த மனிதர்களைப் போலவே...

நெடுந்தெருவில் தூரப் பயணத்தின் பின்னர், ஆரம்பிக்கும் ஒரு தனிவழிப் பாதையின் முடிவில் அந்த வீடு அமைந்திருந்தது.

பாதை ஓரங்களில் புற்கள் படர்ந்திருந்தாலும், வீட்டு வாசல் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சிறிய வாயிற்கதவு, சில இடங்களில் பூச்செடிகள், விளக்கு வைப்பதற்கான ஒரு பெட்டி, ஆங்காங்கே உடைந்த கூரை, திறந்த கதவு.... மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றை மாத்திரம் கொண்டிருந்தது அந்த வீடு.

பட்டம் - சிறுகதை


அறைவாங்கிய கன்னம் சிவந்திருந்தது. அழுதபடியே உறங்கிப் போன சோபனாவின் கண் ஓரத்தில் ஒரு நீர்த்துளி உயிர்ப்புடன் இருந்தது. அருகில் வந்து படுத்த சுந்தர், தலையணைக்கும் சோபனாவின் கழுத்;துக்கும் இடையில் கையை செருகி, அணைத்துக் கொள்ள முற்பட்டான். உறக்கத்தில், அடித்தான் என்பதை நினைத்தும் பார்க்காமல் சோபனா தாமாக சுந்தரின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள். சோபனாவின் கண் ஓரத்தில் உயிர்ப்புடன் இருந்த கண்ணீர்த்துளியும், கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அச்சும் சுந்தருக்கு நீர்த்தாரைப் போல கண்ணீரைப் பெருக வைத்தது.

உஷ்ணம் - சிறுகதை

என்னையெல்லாம் எந்தப் பெண்தான் பார்ப்பாள்.

அழகானப் பெண்களை நான் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.

அழகானப் பெண்கள் என்றும் சொல்லமுடியாது.

அநேகமாக என்னைக் கடந்து போகின்ற எல்லா பெண்களையும் நான் பார்ப்பதுண்டு.

மகன் வருவான் - (சிறுகதை)

அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.

கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.

சொற்பேச்சுகேளா மகன்...


நாளாந்தம் அந்த பாதையின் ஊடாக பயணிக்கிறேன்..

வாரத்தில் இரண்டு தடவைகளாவது, பேருந்தின் இடது பக்க யன்னல் இருக்கையில் அமரும் போதெல்லாம், அதே இடத்தில் அந்த பெண்ணையும், அவள் தம் குழந்தைகளையும் காண்கிறேன்..

இன்று வரையில் சுமார் 3 மாதங்களாக அவளை கண்டபடியே இருக்கிறேன்.

தீ (சிறுகதை)


Image result for fireஅந்த முற்றம் அவனுக்கு புதிதாய் இருந்தது. பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே மேற்சட்டைகளை அணிந்தவர்கள், அரையும் குறையுமாக ஆங்கிலத்தில் பீத்தியப்படி அங்கிங்கும் அலைந்தனர்.

இலவச வைஃபை (FREE WIFI)

சில தினங்களுக்கு முன்னர் நான் நானாக இருக்கவில்லை..
பேஸ்புக்கும், மெசஞ்சரும் இன்றி என் நிமிடங்கள் நகராதிருந்தன...
இத்தனைக்கும் அதனை நான் விரும்பி செய்திருக்கவில்லை..
விஷ்ணு என் பெயர்,
சில வாரங்களுக்கு முன்னர்தான் எனது கைப்பேசிக்கு முதல் தடவையாக பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளை பதிந்தேன்..
கொழும்பில் உணவகம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, அங்கு இலவச வைஃபை கிடைப்பதாக அறிவிப்பு பலகை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.
இதனால் எனது கைப்பேசியின் மென்பொருளை புதுப்பித்துக் கொண்டதுடன், பேஸ்புக், மெசெஞ்சர்களையும் பதிவு செய்துக் கொண்டேன்...

இந்தியா – பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது...

இப்போது நேரம் 6.30...

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினையால் இந்தப் போட்டி கொழும்பில் நடத்தப்படுகிறது.

பார்த்தீபனும் பட்டாசும்


காலை 7 மணி....

பதுளை நகரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாய் உள்ள இரண்டு பெரிய மாடி வீடுகளுக்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் இருந்த குட்டிச்சுவரை பார்த்தபடியே மேன்மாடத்தில் நின்றிருந்தார் முருகேசு ஐயா...

ஒரு அடி அகலத்தில் சில அடி நீளத்துக்கும் உயரத்துக்குமாக இருந்த அந்தச் சுவர் வேலை தெரியாதவர்களாலோ, அல்லது அவசரஅவசரமாகவோ கட்டப்பட்டிருந்தமை தெளிவாகத் தெரிந்தது..

மட்டக்குச்சி

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ?

அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும்.

கைப்பேய்‬


12356957_504487463057154_4506605144855243332_o

 உலகெங்கும் கையடக்க தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
யாரும் இதனை வெறுப்பாரில்லை.

அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக கையடக்க தொலைபேசி மாறி, தற்போது மனிதர்களின் அங்கங்களின் ஒன்றாகவே ஆகிவிட்டது.

விண்கல்லும் வித்தக பெருமாளும் - பாகம் 2


 
'தமிழனே தமிழன்.. 1300 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விடயத்தையும் முன்கூட்டியே ஆரூடம் சொல்லி இருக்கிறானே..'

வித்தகனார் திருமொழிந்தார்.

'சொல்லி என்ன பயன். இப்போது இவ்வாறான பொருட்கள் விழுவதும் வாடிக்கைதானே..?'

விண்கல்லும் வித்தக பெருமாளும் பாகம் 1

2103 ஜனவரி 10
காலை ஆறு மணிக்கெல்லாம் அவர் தயாராகிவிட்டார்.
வழமையாக அணியும் காலின் கால்பங்கை மறைக்கும் பாதணி, அதற்கு மேல் மறைக்க றப்பர் காற்சட்டை, மேலே றப்பர் கோர்ட் என்று எல்லாம் இருளின் நிறத்தில் இருந்தது.

அவரின் பெயர் மட்டும்தான் வித்தக பெருமாள்..

யூஓன்

'இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்' 

யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்... 

யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்...

அய்டா 2035

http://www.vikeywignesh.com/2016/01/2035.htmlகோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது.

இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல்.
என் பெயர் “அய்டா 2035”

என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி.
என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி.
கோவர்தன் ஒரு ‪#‎விஞ்ஞானி‬.

கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம் (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம்...
பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்...
எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்...
கதவுக்கு அருகில் கார்திகா..
ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி... கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக...
திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்....

என் அருமை சந்திரிக்கா

கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம்.
இரவு 1 மணி
படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்....
ஒன்றும் தெரியவில்லை...
மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்...
அப்போதும் தெரியவில்லை
கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்...
கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது..
அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது...
எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து

ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்..

நேரம் காலை 4.30

இந்த நேரத்தில் யாரிந்த பெண்.

'ஹாய்... குட் மோர்னிங்' – (நான்)

'குட் மோர்னிங்.. நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கதானே? – (அவள்)

செல்வி


கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது.
இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா….
என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள்.