விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.
டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா
2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக
அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம்
வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர்
சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.