தம்பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தம்பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிதாயினி ராஜ்சுகா


http://suga-elizabeth.blogspot.com/2015/09/2035.html

விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.

அமல்ராஜ் பிரான்ஷிஸ்


http://www.rajamal.com/

அண்மையில் தினக்குரலில் வெளியான “அய்டா 2035” என்னும் ஒரு சிறுகதையை வாசித்தேன். அது ஒரு புதிய தொழில்நுட்ப புனைவு. அதை எழுதியிருந்தவர் Vikey Wignesh.

ஈழத்தில் இப்பொழுது பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தரிசிக்க முடிகிறது.

அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டும் பேர்வழி இந்த விக்னேஸ். இந்த கதைதான் அவர் எழுதி நான் முதல் முதல் வாசித்த கதை. சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வின் மினி வேர்ஷன். வாசித்தபோது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.