ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.
நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.
சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...
நேற்றிரவு உறங்கப்படுத்து இன்று அதிகாலைக்கு முந்திய இரவு 2 மணி வரையில் விழித்துதான் இருந்தேன். உறக்கம் வர ஆரம்பித்த முதற்சில நொடிகளில் உறங்கிக் கொண்டிருந்தேனா? இல்லையா? என்பதில் ஒரு சிறுகுழப்பம் இருக்கிறது. ஆனால் என்னால் நன்கு உணரவும், நுகரவும் முடிந்தது... ஏதோ ஒரு பௌடரின் மென்மையான மணம் தீவிரமாக எனது அறையில் வீசியது.. இந்த வேளையில் எப்படி இந்த மணம் என்ற உள்மனக்கேள்வியோடு, தலையணையில் இருந்து தலையைத் தூக்கினேன்... பின்னால் திரும்பி கதவு வாயிலைக் காண சற்று தயக்கமாக இருந்தது.... இதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். முன்னரும் இவ்வாறான வாசனையை உணர்ந்திருக்கிறேன்.
எனக்கு எப்போதும் எதனையும் முதலாம் திகதி ஆரம்பிப்பதில் கொள்ளை விருப்பம். அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையெல்லாம் இல்லை. 1 என்பது ஆரம்ப புள்ளி என்ற மனநிலை இருக்கும். எல்லோருக்கும் அந்த மனநிலை இருக்கக்ககூடும்.
ஜுன் 28ம் திகதியே என்னை சூரியன் செய்திப்பிரிவில் இணையுமாறு அழைக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைக்கால நினைவின் பலனாக பாட்டி ஒருவரை 'கொலை' செய்துவிட்டு, மரண செய்தி அனுப்பி, 1ம் திகதி இணைந்துக் கொள்வதாக கூறி இருந்தேன்.
பெரும் வலியை ஏற்படுத்தி விடும் சிலரின் இளவயது மரணம்....
அவிசியின் மரணமும் அப்படித்தான்...
ஜேர்மனியின் இசைக் கலைஞரான அவர், வெறும் மின்னியல் சப்தங்களை வரிசைக்கிரமமாக அடுக்கிவிட்டு, அங்கும் இங்கும் சப்த அலைகளை ஓடவிட்டு இதுதான் இசை என்று வாதிடுவோருக்கு மத்தியில் நின்று, ஆழ்மன உணர்வின் அடிவரை சென்றவர்....
அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.
குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.
உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.
அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.
கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.