இந்தியா – பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது...

இப்போது நேரம் 6.30...

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினையால் இந்தப் போட்டி கொழும்பில் நடத்தப்படுகிறது.

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பின் இன்பம்

இப்போதெல்லாம் எந்தன் துவாலையை பார்க்கும் தருணங்களிலெல்லாம் கலக்சிக்கு போய் திரும்புவோமா என்றொரு சிறுபிள்ளை எண்ணம் தோன்றுவதுண்டு...

கந்தசாமியும் கலக்சியும் படித்துவிட்ட எல்லோருக்கும் சில நாட்களுக்கு இப்படி ஒரு மாயச்சிறுமனம் ஒட்டிக் கொண்டிருக்கும்... பின் விடுபடும்...

பொதுவாகவே நான் ஜே.கே அண்ணாவின் அபிமானி.

அவர் அரசியல்வாதி அல்லாவிட்டாலும், அவருக்கே வாக்கு என்ற நிலை..

ஆகவே கந்தசாமியும் கலக்சியும் புத்தகம் வெளியாவதற்கு முன்னமே அது பிடித்துவிட்டது.

பார்த்தீபனும் பட்டாசும்


காலை 7 மணி....

பதுளை நகரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாய் உள்ள இரண்டு பெரிய மாடி வீடுகளுக்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் இருந்த குட்டிச்சுவரை பார்த்தபடியே மேன்மாடத்தில் நின்றிருந்தார் முருகேசு ஐயா...

ஒரு அடி அகலத்தில் சில அடி நீளத்துக்கும் உயரத்துக்குமாக இருந்த அந்தச் சுவர் வேலை தெரியாதவர்களாலோ, அல்லது அவசரஅவசரமாகவோ கட்டப்பட்டிருந்தமை தெளிவாகத் தெரிந்தது..

இறைவி....

அண்மைய காலமாய் நான் கடந்து கொண்டிருக்கும் வலி நிறைந்த சூழ்நிலை இதுதான்..

ஆண்களின் ஒவ்வொரு செயலும் ஏன் பெண்களை அதிகம் பாதிக்கிறது..

கடந்த வருடம் வித்தியாவில் ஆரம்பித்தது இந்த வலி...

இப்போது வினுப்பிரியா, சுவாதி என்றும்.. இடையில் பலரும்...

அவளின் கடிதம் 1

நீ வேண்டாம் என்றுதான் சொல்வாய் என்று எனக்கு தெரியும்..

உன் அளவுக்கு உன்னிலை அறிந்தவள் நான்...

இருந்தாலும் என்னைப்பற்றிக் கொஞ்சம் யோசி...

எனக்கும் பாவக்கறைகள் உண்டென அறி...

அவனது கடிதம் 1


வேண்டாம்...

அவசரப்பட்டு படத்தை அனுப்பிவிடாதே..

நான் உன் அளவுக்கு ஒன்றும் யோக்கியன் அல்ல..

நேரில் பார்த்தப் பிறகும் இதே அளவு என்னிடம் நேசம் இருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது...

அழிப்பு

தரையில் கிடக்கும்
தலைகளையெல்லாம்
நான்தான் துண்டித்தேன்...

வண்டிகளின் சக்கரங்களையும்
துண்டிக்கச் செய்தது
நான்தான்...

என் முன்னே
துப்பாக்கியை நீட்டிய
சின்னப்பயல் சிப்பாயைக்கூட
சின்னாப்பின்னம் செய்தேன்...

குடைக்குள் மழை

குடைக்கு கீழ அவளோட போக கூச்சமாகவே இருந்தது...

மழை ஒருபக்கம் நனைச்சதாலும், குடை ஒருபக்கம் மறைச்சதாலும் அர்த்தநாதீஸ்வரரப் போல இருந்தேன்..

அவளும்தான்...

பஸ்ல இருந்து இறங்கி ஸ்டேண்டல நின்று மழையை பார்த்து பயந்தப்போ, அந்த இரக்கம் பிறந்திருக்கனும் அவளுக்கு...

ஐம்புலனும் அகத்தடக்கி

அத்தைக்கு ஆக்கிவச்சேன்,
ஆட்டுக்கும் புல்லுவச்சேன்,
அர வயசு புள்ளைக்கும்
அலுக்காம ஊட்டிவிட்டேன்.
சித்தைக்கு வளருமந்த
சீவனுக்கு சோறுவச்சேன்,
சித்தம் வச்சி செஞ்சதெல்லா,
சீக்கிரமா தீர்த்துட்டிக.
ஒத்தசொல்லும் சொல்லாம
உங்க பாடு போறிகளே,
ஒருத்தி இங்க நின்னுருக்கா,
ஒங்க வாயி தெறக்காதோ?

மட்டக்குச்சி

காலடிகளே படாத அந்த பாதையின் கடைசி பகுதி எப்படி இருக்குமோ?

அவ்வப்போது என்மனம் ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் கேள்வி அது.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் என் மகளின் எதிர்காலம், அந்த கடைசிப் பகுதியில்தான் இருக்கும்.

கலை கலை கலை....

எப்படிபட்ட படைப்பாளியாக இருந்தாலும், அவருக்கென்று ஆதரவு, எதிர் குழுக்கள் இருக்கும்...

இரண்டு தரப்புமே அவரின் வாசகர்கள் அல்லது ரசிகர்கள்தான்...

ரசனையின் உச்ச கட்டம் தான் விமர்சனம் என்பேன்..

ஆதரவானாலும், எதிர்ப்பானாலும் இரண்டுமே படைப்புக்கான பலன்...

கைப்பேய்‬


12356957_504487463057154_4506605144855243332_o

 உலகெங்கும் கையடக்க தொலைபேசியின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
யாரும் இதனை வெறுப்பாரில்லை.

அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக கையடக்க தொலைபேசி மாறி, தற்போது மனிதர்களின் அங்கங்களின் ஒன்றாகவே ஆகிவிட்டது.

தலைப்பிழந்த கதை 02

அந்த மனிதர் சாரத்தை மடித்து அதன் ஓட்டைகள் தெரியாதபடிக்கு மேல் தூக்கி கட்டி இருந்தார்.

சாரத்தில் படிந்திருந்த அழுக்கு அதன் உண்மை நிறத்தை மாற்றி இருந்தது...

சட்டையின் மேல் பொத்தான்கள் இல்லாமல் பாதி திறந்த நிலையில் இருந்தது.

தலைப்பிழந்த கதை 01

மாலை 7 மணி இருக்கும்....

மாலுக்கடை தாண்டி ஐந்துலாம்பு சந்தியோடு செல்லும் ஏதோ ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.

மதுக்கடை முன்னால்...