2006ல் அப்பா இறந்தப் பின்னர், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எம்மை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெற்றன...
முகாமைத்துவமும், வேலைக்காலத்தில் அப்பாவிற்கு எதிரிகள் போல் இருந்தவர்களும் அதற்கான பெரும் சூழ்ச்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டனர்.
மாற்றுவழிகள் எவையும் இல்லாமல், செய்வதறியாத மனநிலையுடன் நாட்களை கடத்திக் கொண்டிருந்த காலப்பகுதி அது...










