எம்மை நாமே ஏளனப்படுத்தாதிரல்


100 கெட்டவர்களை திட்டுவதை விட 10 நல்லவர்களின் மனம் கோணாது அமைதிகாப்பது சிறப்பானதாக நான் நினைக்கிறேன். மலையகத் தமிழர்களை ஏளனித்து காணொளிபரப்பிய அந்த நபர் இவ்வாறான பல இகழ்வாதக்குணத்தோரின் ஒரு பிரதிபலிப்பு. அந்த நபரை திட்டி அவர்போல நடந்துக் கொள்வதும், அந்தக் காணொளியை மேலும் மேலும் பகிர்ந்து அவரை புகழடைய நாமே காரணமாவதும் மடைமை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

அடேய் தம்பி...

அடேய் தம்பி... 
அங்கு ஏன் சென்றாய்....?
முகமறியாமல்,
முகவரி அறியாமல், 
சிதைந்து போனப் பின்னே
சிந்திக்க வைத்தாயே... 

இதோ என் கதை

சற்று முன்னர் நடந்த சம்பவம் என்னவென்று புரியவில்லை இன்னும்.

ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்யங்கள் கோர்வையாக நினைவில் வந்து போயின.

முன்னறையின் ஷோஃபாவில் அமர்ந்த படியே யோசித்தேன்..

பெண்களின் அரசியல் பங்கேற்றல் ஏன் முக்கியப்படுகிறது?



Image result for women in politics

சர்வதேச அளவில் தற்காலத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்றல் அதிகரித்து வருகிறது.

பலநாடுகளின் தலைவர்களாக தற்போது பெண்கள் பதவி வகிக்கின்றனர்.

ஒருநாட்டின் தலைவராக பெண் ஒருவர் பதவி வகிப்பதால் அந்த நாட்டின் பெண்களின் அரசியல் பங்கேற்றல் அதிகம் இருக்கிறது என்று கொள்ள முடியாது.

இலவச வைஃபை (FREE WIFI)

சில தினங்களுக்கு முன்னர் நான் நானாக இருக்கவில்லை..
பேஸ்புக்கும், மெசஞ்சரும் இன்றி என் நிமிடங்கள் நகராதிருந்தன...
இத்தனைக்கும் அதனை நான் விரும்பி செய்திருக்கவில்லை..
விஷ்ணு என் பெயர்,
சில வாரங்களுக்கு முன்னர்தான் எனது கைப்பேசிக்கு முதல் தடவையாக பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளை பதிந்தேன்..
கொழும்பில் உணவகம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, அங்கு இலவச வைஃபை கிடைப்பதாக அறிவிப்பு பலகை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.
இதனால் எனது கைப்பேசியின் மென்பொருளை புதுப்பித்துக் கொண்டதுடன், பேஸ்புக், மெசெஞ்சர்களையும் பதிவு செய்துக் கொண்டேன்...

இந்தியா – பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது...

இப்போது நேரம் 6.30...

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினையால் இந்தப் போட்டி கொழும்பில் நடத்தப்படுகிறது.

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பின் இன்பம்

இப்போதெல்லாம் எந்தன் துவாலையை பார்க்கும் தருணங்களிலெல்லாம் கலக்சிக்கு போய் திரும்புவோமா என்றொரு சிறுபிள்ளை எண்ணம் தோன்றுவதுண்டு...

கந்தசாமியும் கலக்சியும் படித்துவிட்ட எல்லோருக்கும் சில நாட்களுக்கு இப்படி ஒரு மாயச்சிறுமனம் ஒட்டிக் கொண்டிருக்கும்... பின் விடுபடும்...

பொதுவாகவே நான் ஜே.கே அண்ணாவின் அபிமானி.

அவர் அரசியல்வாதி அல்லாவிட்டாலும், அவருக்கே வாக்கு என்ற நிலை..

ஆகவே கந்தசாமியும் கலக்சியும் புத்தகம் வெளியாவதற்கு முன்னமே அது பிடித்துவிட்டது.

பார்த்தீபனும் பட்டாசும்


காலை 7 மணி....

பதுளை நகரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாய் உள்ள இரண்டு பெரிய மாடி வீடுகளுக்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் இருந்த குட்டிச்சுவரை பார்த்தபடியே மேன்மாடத்தில் நின்றிருந்தார் முருகேசு ஐயா...

ஒரு அடி அகலத்தில் சில அடி நீளத்துக்கும் உயரத்துக்குமாக இருந்த அந்தச் சுவர் வேலை தெரியாதவர்களாலோ, அல்லது அவசரஅவசரமாகவோ கட்டப்பட்டிருந்தமை தெளிவாகத் தெரிந்தது..

இறைவி....

அண்மைய காலமாய் நான் கடந்து கொண்டிருக்கும் வலி நிறைந்த சூழ்நிலை இதுதான்..

ஆண்களின் ஒவ்வொரு செயலும் ஏன் பெண்களை அதிகம் பாதிக்கிறது..

கடந்த வருடம் வித்தியாவில் ஆரம்பித்தது இந்த வலி...

இப்போது வினுப்பிரியா, சுவாதி என்றும்.. இடையில் பலரும்...

அவளின் கடிதம் 1

நீ வேண்டாம் என்றுதான் சொல்வாய் என்று எனக்கு தெரியும்..

உன் அளவுக்கு உன்னிலை அறிந்தவள் நான்...

இருந்தாலும் என்னைப்பற்றிக் கொஞ்சம் யோசி...

எனக்கும் பாவக்கறைகள் உண்டென அறி...

அவனது கடிதம் 1


வேண்டாம்...

அவசரப்பட்டு படத்தை அனுப்பிவிடாதே..

நான் உன் அளவுக்கு ஒன்றும் யோக்கியன் அல்ல..

நேரில் பார்த்தப் பிறகும் இதே அளவு என்னிடம் நேசம் இருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது...

அழிப்பு

தரையில் கிடக்கும்
தலைகளையெல்லாம்
நான்தான் துண்டித்தேன்...

வண்டிகளின் சக்கரங்களையும்
துண்டிக்கச் செய்தது
நான்தான்...

என் முன்னே
துப்பாக்கியை நீட்டிய
சின்னப்பயல் சிப்பாயைக்கூட
சின்னாப்பின்னம் செய்தேன்...

குடைக்குள் மழை

குடைக்கு கீழ அவளோட போக கூச்சமாகவே இருந்தது...

மழை ஒருபக்கம் நனைச்சதாலும், குடை ஒருபக்கம் மறைச்சதாலும் அர்த்தநாதீஸ்வரரப் போல இருந்தேன்..

அவளும்தான்...

பஸ்ல இருந்து இறங்கி ஸ்டேண்டல நின்று மழையை பார்த்து பயந்தப்போ, அந்த இரக்கம் பிறந்திருக்கனும் அவளுக்கு...

ஐம்புலனும் அகத்தடக்கி

அத்தைக்கு ஆக்கிவச்சேன்,
ஆட்டுக்கும் புல்லுவச்சேன்,
அர வயசு புள்ளைக்கும்
அலுக்காம ஊட்டிவிட்டேன்.
சித்தைக்கு வளருமந்த
சீவனுக்கு சோறுவச்சேன்,
சித்தம் வச்சி செஞ்சதெல்லா,
சீக்கிரமா தீர்த்துட்டிக.
ஒத்தசொல்லும் சொல்லாம
உங்க பாடு போறிகளே,
ஒருத்தி இங்க நின்னுருக்கா,
ஒங்க வாயி தெறக்காதோ?