அறைவாங்கிய கன்னம் சிவந்திருந்தது. அழுதபடியே உறங்கிப் போன சோபனாவின் கண் ஓரத்தில் ஒரு நீர்த்துளி உயிர்ப்புடன் இருந்தது. அருகில் வந்து படுத்த சுந்தர், தலையணைக்கும் சோபனாவின் கழுத்;துக்கும் இடையில் கையை செருகி, அணைத்துக் கொள்ள முற்பட்டான். உறக்கத்தில், அடித்தான் என்பதை நினைத்தும் பார்க்காமல் சோபனா தாமாக சுந்தரின் கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டாள். சோபனாவின் கண் ஓரத்தில் உயிர்ப்புடன் இருந்த கண்ணீர்த்துளியும், கன்னத்தில் பதிந்திருந்த கைவிரல் அச்சும் சுந்தருக்கு நீர்த்தாரைப் போல கண்ணீரைப் பெருக வைத்தது.
தனியன் காதல்
மெசெஞ்சரில் காட்டும் அதே அவசரத்தை இங்கும் காட்டிக்கொண்டிருந்தேன். அவள் வகுப்பில் எனக்கு மிக அருகில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
குறிப்பிட்ட நிமிட இடைவெளிக்கு ஒருமுறை என்னிடம் எதையாவது கேட்கவோ, சீண்டவோ, பென்சிலால் என்னை அல்லது என் புத்தகத்தை தட்டவோ அவள் தவரவில்லை.
பெரும்பாலும் எங்களது பேச்சு வகுப்பு ஆசிரியரின் உடை தொடர்பிலும், படிப்பிக்கும் போது அவர் விடும் பிழைகள் தொடர்பிலுமாக இருந்தன.
எனக்கு அப்படி இன்னொருவரை கிண்டல் செய்வது, முக்கியமாக அவர் அறியாமல் அவரை பரிகாசம் செய்வதெல்லாம் பிடிப்பதில்லை.
ஆனால் இவளென்பதால் அவை பிடித்திருந்தன.
கதிர்காமத்தில்
ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னர் கதிர்காமம் செல்லக்கிடைத்தது.எப்போது என் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் மகிழ்வடைபவன் நான்.
திடீரென மனதுள் ஒருவர் கட்டளையிடுவதைப் போல தோன்றும்... அதனை செய்து முடிப்பதில் ஒரு நிம்மதி கிடைக்கும்.
பல அறிஞர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள். 'உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்'
ஈழத்து இசை இரசிகனாக ஒரு பதிவு
ஒருகாலத்தில் இலங்கையில் மெல்லிசைப்பாடல்கள் என்று பல பாடல்கள் வெளியாகிவந்தன.
நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.
சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நானும் அவ்வாறான பல பாடல்களுக்கு தீவிர ரசிகன்.
சில பாடலைகளைத் தேடி அதன் அசல் பதிப்பை பெற்றுக் கொள்ள பெரும் சிரமம் பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் அதனைக் கொண்டுள்ளவர்கள் எமக்கு வழங்க விரும்புவதில்லை. அவர்களும் அவற்றை பயன்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் என்னவோ.? இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கூடுவிட்டு கூடுபாய்தல்(Video)
பிரபு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் இந்த கூடுவிட்டு கூடுபாயும் சங்கதி சொல்லப்பட்டிருக்கும்.
எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.
அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.
எனக்கு 10 வயதிருக்கும் காலத்தில் அந்த படத்தை பார்த்தேன்.
அண்மையில் ஜெயம்ரவி – அரவிந்சுவாமி நடிப்பில் அவ்வாறான ஒருபடம் வந்தது.
சூரியன் FMமும் நானும் - பாகம் 5
சூரியன் FMமும் நானும் - முன்னைய பாகங்கள்
நான் ஏன் எழுதுகிறேன்....?
அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...
நான் ஏன் எழுதுகிறேன்....?
அவ்வப்போது என் மனநிலையின் அடிப்படையில் இந்த கேள்வி எழுவதும், அதற்கான பதிலும் அமைகிறது.
பாடசாலைக் காலங்களில் கவிதைகள் எழுதுவதில் ஊக்குவிக்கப்பட்டேன்.
ஆனால் சரியாக வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது புரிகிறது.
9ம் வகுப்பு படிக்கும் போது ஏதோ ஒரு சிறிய கவிதையை எழுதியதால், எனது தமிழ் ஆசிரியர் நவமோகனால் முதல்தடவையாக ஊக்குவிக்கப்பட்டு, கவிதை எழுதத் தொடங்கினேன்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






