சூரியனும் நானும் - பாகம் 2

2008 ஜுன் மாதம் 23-24ம் திகதிகளில் ஒரு தினத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

சூரியன் எப்.எம். தலைமையகத்தில் அங்குமிங்கும் நடந்தபடி கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்..

இன்னும் அப்போதைய முகாமையாளர் இந்திரஜித் அண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.

சூரியன் வானொலியும் நானும்........ (01)

2004-05

அப்போதெல்லாம், ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது மட்டுமே என் கனவுகளாய் இருந்தன.

குடும்பம், வருமானம், காதல், தொழில் இதெல்லாம் எண்ணங்களுக்கு எட்டாதவிடயமாக பட்டன.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஊவா சமூகவானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவண்ணனின் அழைப்பில், ஒரே ஒரு விருப்பத் தெரிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன்.

புதிதாய் புலம்பல்

நான் மட்டும்
நனைந்திடும் வகையில்
வான் தூவிற்று மழை....
இத்தனை நீர்க்கீற்றும்,
எனை மட்டுமேன் நனைக்க?
தொட்டுப்பார்க்கும் எந்த பரப்பிலும்,
சொட்டு நீரில்லை அவள் மேனியில்.... 

மகன் வருவான் - (சிறுகதை)

அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள் இருந்தாள் செல்லம்மா.

கணவர் அப்புசாமி, சில வருடங்களுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தில் கண்காணியாக இருந்தவர். வயது இருக்கும்போதே மகனின் வற்புறுத்தலால் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். அவரது ஓய்வுகால நிதியை வைத்தே மகன் ரமேஷ் டுபாய்க்கு சென்றிருந்தான்.

கடிதனும் பதிலனும்

தன் பங்கிற்கு
தக்கதாகவோ தகாததாகவோ,
பதில் எதனையும்
அறிந்துக்கொள்ள முடியாத
அனேகமான கடிதங்கள்,
ஒரே கவிதையை உளறிவிட்டு
தற்கொலை செய்துக் கொள்கின்றன...

அவளின் கடிதம் 4


ஏனடா என்னை இம்சிக்கிறாய்..?

இத்தனைக் கடிதங்கள் அனுப்பியும் ஏன் இன்னும் பதில் வரக் காணோம்?

அவ்வளவு பிடிக்காதவாளாய் ஆனேனா நான்?

சில வாரங்களுக்கு முன்னால், இருவரும் சிலிர்த்துப் பரப்பிய கடிதங்களை அசைவிட்டப்படியே சிந்தைக் கடக்கிறது நாட்களை...

உனக்கு என்னாயிற்று?

நியாயமான தாமதம்............?

வெளிச்சம் நீரில் நனையும் போது ஒளிமங்கிவிடுகிறது...

அன்றும் இதுபோலவே ஒரு மழைநாள்...

பகல்பொழுதும் சற்று இருண்டிருந்தது...

பேருந்து யன்னல் ஓரக் கம்பியில் கை வைத்து தலைசாய்ந்தபடியிருக்க எண்ண ஓட்டங்கள் கட்டுக்கடங்காமல் பயணித்திருந்தன...

பயங்கரம்


அடுத்தவரை பயமுறச் செய்வதில் அத்தனை இன்பம்.

சிறுவயதில் இருந்து இருக்கும் பழக்கம் இது எமக்கு.

இன்னுமே மாறவில்லை.

சொற்பேச்சுகேளா மகன்...


நாளாந்தம் அந்த பாதையின் ஊடாக பயணிக்கிறேன்..

வாரத்தில் இரண்டு தடவைகளாவது, பேருந்தின் இடது பக்க யன்னல் இருக்கையில் அமரும் போதெல்லாம், அதே இடத்தில் அந்த பெண்ணையும், அவள் தம் குழந்தைகளையும் காண்கிறேன்..

இன்று வரையில் சுமார் 3 மாதங்களாக அவளை கண்டபடியே இருக்கிறேன்.

கடஞ்செய்...

அம்மணத்தால் வெட்கிடா,
அம்மணங் களையும்
ஆடைகள்...