எலிசபத்…

என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்…

எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள அடுக்குமாடிகளில்…. ஏழாவது மாடியில்….

கட்டிலில் இருந்து மேலே தலையை தூக்கினால் என் யன்னல் வழியாக, எதிர்வீட்டு யன்னல் வரையில் என் கண்கள் செல்லும்…

இது கண்டிப்பாக இரவு வேளை இல்லை…

அஞ்சி அஞ்சு

சனிக்கிரகமும், அதனை சுற்றிய வலையங்களையும் போன்றன அவர் கண்களும், இமைகளும், புருவங்களும்…
பார்வையில் சிக்கியவர்களின் நிலை பெரும்பாலும் பரிதாபம்.
ஒருவிதமான கிளியை நினைவுப்படுத்தும் மூக்கும், உதடுகளும். பொன்னிற முகம்.

கவிதாயினி ராஜ்சுகா


http://suga-elizabeth.blogspot.com/2015/09/2035.html

விக்கி விக்னேஸ் அவர்களுடைய அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் பற்றி..
நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.

அமல்ராஜ் பிரான்ஷிஸ்


http://www.rajamal.com/

அண்மையில் தினக்குரலில் வெளியான “அய்டா 2035” என்னும் ஒரு சிறுகதையை வாசித்தேன். அது ஒரு புதிய தொழில்நுட்ப புனைவு. அதை எழுதியிருந்தவர் Vikey Wignesh.

ஈழத்தில் இப்பொழுது பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தரிசிக்க முடிகிறது.

அவ்வாறான ஒரு நம்பிக்கையூட்டும் பேர்வழி இந்த விக்னேஸ். இந்த கதைதான் அவர் எழுதி நான் முதல் முதல் வாசித்த கதை. சுஜாதாவின் “என் இனிய இயந்திரா” வின் மினி வேர்ஷன். வாசித்தபோது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

கதைக்கு முன்னர் விதை...


#பேய் இருக்கா இல்லையா? 
என்று என்னிடம் கேட்டால், 'இல்லை' என்று சொல்ல துணிகையில், சில கேள்விகள் என் முன் வந்து நிற்கும்...
பராய வயதில் நடத்திய ஆய்வின் பின்னர் பெற்ற பக்குவம், இதனை இல்லை என்று மறுக்க முற்பட்டாலும், #சிறுவயதில் இருந்து நான் அனுபவித்த சில விந்தைகள், இல்லை என்று சொல்வதை சற்று தள்ளி வைக்க தூண்டும்.

நண்பி

ஒரு நண்பி இருந்தாள்…
வெளியிடத்தில் இருந்த அவளின் காதலன் தொல்லை கொடுத்தான்.
அவனும் என் நண்பன்தான்… நல்ல நண்பனும் கூட…. இப்போது இல்லை…
என்னிடம் வந்து புலம்புவாள்..
முடிந்தவரை ஆறுதலாய் இருக்க முயற்சித்தேன்…
சில நாள், பலநாள்….
நட்பு விரிவடைய, அவளை நல்ல நண்பியாக பார்த்தேன்…
நல்ல நண்பனாய் நடந்தேன்….

வராது போன வசந்தம்…

‘யாரப்பன் நீர்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,

‘பசியோடிருக்கிறான் பாவம்’

தாத்தாவின் குரல் எதிர்திசையில்….

‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’