நண்பி

ஒரு நண்பி இருந்தாள்…
வெளியிடத்தில் இருந்த அவளின் காதலன் தொல்லை கொடுத்தான்.
அவனும் என் நண்பன்தான்… நல்ல நண்பனும் கூட…. இப்போது இல்லை…
என்னிடம் வந்து புலம்புவாள்..
முடிந்தவரை ஆறுதலாய் இருக்க முயற்சித்தேன்…
சில நாள், பலநாள்….
நட்பு விரிவடைய, அவளை நல்ல நண்பியாக பார்த்தேன்…
நல்ல நண்பனாய் நடந்தேன்….

வராது போன வசந்தம்…

‘யாரப்பன் நீர்’
மா பிசைந்த கையோடு அந்த பாட்டி கேட்கும் கேள்வி புரிகிறது…. பதில் புரியவில்லை… யோசித்து பார்ப்பதற்குள்,

‘பசியோடிருக்கிறான் பாவம்’

தாத்தாவின் குரல் எதிர்திசையில்….

‘ஃ வடிவில்’ அடுக்கப்பட்ட கல்லடுப்பில், விறகுக் கட்டையை விட்டு, பாதி எழுந்தவாறு
‘இவனுக்கு எதாச்சும் சாப்பிட கொடுமன்’