
நெற்றியில் ஏறி நின்று
நிமிர்ந்து பார்த்தேன்....
அந்த காதல்,
எறும்பை காட்டிலும்
சிறிதாய் தெரிவதை காண
சிரிப்புதான் வந்தது...
உச்சந்தலையில் உள்ள
ஒற்றை முடியாய்,
கோடி முடிகளுக்கு மத்தியிலும்
கொஞ்சம் தனித்துதான் போனேன்....
நீரில் அலம்பிய முகத்தில்,
மூக்கு விளிம்பின்
முற்றத்தில் நிற்கும்
நீர்த்திவலை போல,
நீங்கிச் செல்லும் பரிதாபத்தில் உன்
நினைவுகள்....
நினைத்து உருகி
ஒளி மங்கிப்போன
கண்களுக்கு கீழே,
அழையாமல் வந்த
கறுவளையங்களாய் - சில
கெட்ட பழக்கங்கள்...
உன்
காதுகளுக்கும்
கழுத்துக்கும் இடையில்
எவ்வளவு தூரமென
எண்ணிய - என்
இதழ்களுக்குதான்
எத்தனை இழப்புகள்....?
உதடுகளை பிரிக்காமல்
உம்மென்றே - நீ
இருந்துவிட்ட போதும் - உன்
உள்ளம்
உளறிக் கொட்டியவை - என்
உயிர் வரை கேட்டன...
நீ அறிவாயா?
தாமரை மலருக்குள்
தவறி வீழ்ந்த ஓர் துளி போல்,
இந்த தனி அறைக்குள் நான்.....!
ஒரு கட்டத்துக்கு பின்,
தனிமையை
உணர்ந்ததே இல்லை.....
நான் தனித்திருக்கையில்,
நீ தந்துவிட்டு போன தனிமையே - என்
தனிமைக்கு துணைக்கிருக்கும்.....
ஆகவே
நாங்கள் அனேகர்...
#விக்கிவிக்னேஷ்
ஒற்றை முடியாய்,
கோடி முடிகளுக்கு மத்தியிலும்
கொஞ்சம் தனித்துதான் போனேன்....
நீரில் அலம்பிய முகத்தில்,
மூக்கு விளிம்பின்
முற்றத்தில் நிற்கும்
நீர்த்திவலை போல,
நீங்கிச் செல்லும் பரிதாபத்தில் உன்
நினைவுகள்....
நினைத்து உருகி
ஒளி மங்கிப்போன
கண்களுக்கு கீழே,
அழையாமல் வந்த
கறுவளையங்களாய் - சில
கெட்ட பழக்கங்கள்...
உன்
காதுகளுக்கும்
கழுத்துக்கும் இடையில்
எவ்வளவு தூரமென
எண்ணிய - என்
இதழ்களுக்குதான்
எத்தனை இழப்புகள்....?
உதடுகளை பிரிக்காமல்
உம்மென்றே - நீ
இருந்துவிட்ட போதும் - உன்
உள்ளம்
உளறிக் கொட்டியவை - என்
உயிர் வரை கேட்டன...
நீ அறிவாயா?
தாமரை மலருக்குள்
தவறி வீழ்ந்த ஓர் துளி போல்,
இந்த தனி அறைக்குள் நான்.....!
ஒரு கட்டத்துக்கு பின்,
தனிமையை
உணர்ந்ததே இல்லை.....
நான் தனித்திருக்கையில்,
நீ தந்துவிட்டு போன தனிமையே - என்
தனிமைக்கு துணைக்கிருக்கும்.....
ஆகவே
நாங்கள் அனேகர்...
#விக்கிவிக்னேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக